புதன், 6 ஜூலை, 2011

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது??????

ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது என்று தோன்ற வைக்கும் சம்பவம்
எல்லாருக்குமே நடந்திருக்கும். எப்போது நினைத்தாலும் கடுப்பை
ஏற்றும், அப்படிப்பட்ட, எனக்கு நடந்த (அடிக்கடி), இப்போது நினைவில்
 இருப்பவை சில (பல நடக்கும்..இங்கு சில மட்டும்)

                        


கக்கூஸில் இருக்கும் போது, அனைவரும் கங்கனம் கட்டிக் கொண்டு




 கால் பண்ணுவது.. (இவ்ளோ நேரம் சும்மா தான இருந்தேன்.. அப்போ
 பண்ண வேண்டீதான?). அப்புறம், ஏண்டா எப்போ ஃபோன் பன்னாலும்
 எடுக்க மாட்டிங்கற? என்று திட்டுவது..
எங்கு சென்றாலும், நான் இருக்கும் இடத்திற்கு, 1 கி.மீ சுற்றளவில்,
 பெண்களின் சுவடே இல்லாமல் இருப்பது (நீ ஒரு ராசி கெட்டவன், எங்க
 கூட வராத என்று திட்ட துவங்கி விட்டார்கள் சக சிடிசன்ஸ். லேடீஸ்
 ஸ்பெஷல் பஸ்ஸில் டிரைவராக போய் விடாதே.. கலெக்ஷனே ஆகாது
 என்று கிண்டல் வேறு)
கழுத்தில் கத்தி இருக்கும் போது முதுகில் பயங்கரமாக அரிப்பது (ரவுடி
 எல்லாம் இல்ல.. சலூன் கடையில சொன்னேன்)
                                 



மிகவும் எதிர் பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர். ஆவலோடு அந்த
 நேரத்திற்கு போட்டால், தூர்தர்ஷனில் ஒரு சேட்டு ஷெனாய் வாசித்து
கொண்டு இருப்பார் (இது சின்ன வயசில்.. அடிக்கடி நடக்கும் ஏன் எனக்கு
மட்டும் இப்பிடி சொல்லுங்க

கருத்துகள் இல்லை: