திங்கள், 4 ஜூலை, 2011

மனிதாபிமானம்னா என்னன்னே தெரியாத நாடு சவுதி அரேபியா..(இது உண்மை சம்பவம் )



''நீ இந்துவா முஸ்லிமாமுஸ்லிம் தவிற யாருக்கும் இங்க ட்ரீட்மென்ட்கிடையாதுஉன் கால் அழுகிப் போறதுக்குள்ள காசு வேண்டாம்னு கையெழுத்துப்போட்டுக் கொடுத்துட்டு ஊருக்கு ஓடிப்போ''
-எலும்பு நொறுங்கிய நிலையில் மருத்துவமனையில் படுத்துக் கிடந்த இந்தியஇளைஞன் ஒருவனை இப்படியாக விரட்டியடித்திருக்கிறது சவுதி அரேபிய அரசு.
''மனிதாபிமானம்னா என்னன்னே தெரியாத நாடு சவுதி அரேபியாஎத்தனை ஜென்மம்ஆனாலும் என் பாவம் அவங்களைச் சும்மா விடாது'' என்று கண்ணீர் வடிக்கிறார்ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சதீஷ்பாபு.

சதீஷ்பாபுவுக்கு வயது 28. மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோமுடித்திருக்கிறார்இன்னும் கல்யாணமாகவில்லைநகையை விற்றுவட்டிக்கு கடன்வாங்கி ஆயிரமாயிரம் கனவுகளுடன் விமானம் ஏறினார்பிறகு...

''சவுதிக்கு போகப்போறோம்னு தெரிஞ்சவுடனேமுதல்ல வீட்டுக் கடனையெல்லாம்அடைச்சிடனும்திரும்பி வந்ததும் ஊரே மெச்சுற‌ மாதிரி செக்கச் செவேல்னு ஒருபொண்டாட்டிஅவளுக்குன்னு ஒரு அழகான வீடுஎன் குழந்தைங்க, ''பசியா?அப்டின்னா என்ன?''ன்னு கேக்கணும்இன்னும் என்னவெல்லாமோ கனவு கண்டுட்டுஇருந்தேன்ஆனாஎன்னோட ஒரு காலை இழந்துஇப்போ ஊணமா நிக்கிறேன்.இதுக்கெல்லாம் காரணம்மனிதத் தன்மையே இல்லாத சவுதி அரேபியாதான்'' என்றுசபிக்கும் சதீஷ்பாபுதொடர்ந்து தன் சோகத்தைச் சொல்கிறார்.

''2005, நவம்பர் மாசம்சவுதியில் இருக்கிற எங்க சித்தப்பா மூலமாத்தான் நான்வேலைக்குப் போனேன்அல்ஜூப் நகர் பக்கத்துல 'சகாகா'ங்கிற இடத்துல‌ அவர் பஞ்சர்கடை வச்சிட்டிருந்தார்அவருக்கு பழக்கமான 'மெத்தான்'ங்கிறவர்தான் எனக்குஹவுஸ் டிரைவர் விசா கொடுத்திருந்தார்இதுக்காக மாசம் 1,200 ரூபாயைமெத்தானுக்கு நான் கொடுத்தாகணும்இந்த விசாவை வச்சுக்கிட்டு நாமவேறெங்கயாவது வேலை பாத்துக்கலாம்.
வாயைக்கட்டிவயித்தைக்கட்டி ஒவ்வொரு ஏரியாவா வேலை பாத்ததுல மாசம்பத்தாயிரம் சம்பாதிக்க முடிஞ்சதுஅப்போ நான் சந்திச்ச அனுபவம் இருக்கே... 'சோத்துக்கு வழியில்லைன்னாலும் சொந்த ஊருக்கு எந்த ஊரும் ஈடாகாது'ங்கிறஉண்மை தெரிஞ்சது.

அங்க வேலை செய்யப் போறவங்களுக்கு 'மஜிராராய்க்கணம்'னு ரெண்டு விசாஇருக்கு. 'மஜிரா'ன்னா ஈச்சம்பழம் பறிக்கிறதுதோட்ட வேலை பாக்கிறதுன்னு விவசாயவிசா. 'ராய்க்கணம்'னா ஒட்டகம்ஆடு மேய்க்கிறதுதப்பித் தவறிகூட யாரும் இந்தவேலைக்கு வந்துடக்கூடாதுஇவங்களுக்கு தோட்டத்துல ஒரு துணி கூடாரம்போட்டுத் தநதுடுவாங்கஅதுலதான் படுத்துக்கணும்ஒட்டகததுக்கு வைக்கிறதண்ணியைதான் குடிச்சிக்கணும்.

எங்கள மாதிரி ஆளுங்களை ஒரு அடிமையாத்தான் அரபு ஷேக்குங்க நடத்துவாங்க.காரணமே இல்லாம அடிஉதை விழும்எதுத்துப் பேசிட்டோம்னா, 'இஸ்லாத்தைத்தப்பாப் பேசிட்டான்'னு சொல்லி பள்ளி வாசலுக்கு இழுத்துட்டுப் போயிடுவாங்க.
இலங்கையிலிருநது வந்திருந்த காண்டீபனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்படிகூட்டிட்டுப் போய் சவுக்கால அடிச்சாங்கஒரு ஆள் எந்த ஊர்னே தெரியலைஅவரைக்காருக்குப் பின்னாடி வச்சுக் கட்டிதரதரன்னு ரோட்ல இழுத்துட்டுப் போகும்போதுஎங்களால அழக்கூட முடியலதஞ்சாவூர்காரர் ஒருத்தர்அங்கிருந்த பெட்ரோல்பங்க்கில் வேலை பாத்துட்டு இருந்தார்யாரோ அவர்கிட்ட கள்ள நோட்டைக் கொடுத்துஏமாத்திட்டுப் போய்ட்டாங்ககொஞ்ச நாள் கழிச்சு அதே ஆளுங்க பெட்ரோல் போடவந்தப்போஇவர் அவங்களை பிடிச்சுக் கொடுததுட்டார்மறு நாள் துப்பாக்கியோடதிரும்பி வந்தவங்கஅவரோட தோள்பட்டையிலும்தொடையிலும் சுட்டுட்டுப்போய்ட்டாங்கஇதையெல்லாம் பார்த்த நம்மாளுங்க எது நடந்தாலும் வாய் திறக்கிறதேஇல்லை.

ரோட்ல நாம நடந்து போகும்போது பக்கத்துல கார் வந்து நின்னுச்சின்னா ஓடிப்போயிரணும்ஏன்னாகையில லத்தியை வச்சிக்கிட்டு ஓங்கி அடிக்கிறது அங்குள்ளபணக்காரங்களுக்கு பொழுதுபோக்குஸ்கூல் படிக்கிற சின்னப் பசங்கபலூன்நிறைய மூத்திரத்தைப் பெஞ்சு வச்சுக்கிட்டு நம்மாளுங்க வரும்போது மூஞ்சியிலவீசியடிப்பானுங்கஅதேபோல முட்டையை வீசுறதும் அவங்களுக்குப் பிடிச்சவிளையாட்டுநாம ஷாட்ஸ்கைலி எல்லாம் போட்டுகிட்டு நடநது போனாஅதையும் அவுததுப் போட்டு அவமானப்படுததுவானுங்க..
'முத்தப்பா'ன்னு தாடி வச்சக் கூட்டம் ஒண்ணு அப்பப்போ ரோந்து வரும்.போலீஸைவிட இவங்களுக்குத்தான் பவர் ஜாஸ்தியாராவது பிரச்னைலமாட்டியிருந்தாஉடனடியா அவங்களை இஸ்லாத்துக்கு மாறச்சொல்லிகட்டாயப்படுததுவாங்கஇல்லைன்னா தண்டனை கடுமையா இருக்கும்.
இந்தியா ஆளுங்கன்னா 'நீ இந்துவா?'ன்னு கேட்ட பிறகுதான் விசாரனையேஆரம்பிப்பாங்கஇதனாலயே பலர் சும்மா பேருக்கு முஸ்லிமா மாறிட்டு ஊருக்குவந்தப்புறம் இந்துவாகிடுவாங்கஒரு லட்சம் கடனை வாங்கிட்டு சம்பாதிக்கவந்திருக்கேனே... அதையாவது திருப்பி அடைக்கணுமேன்னு கஷ்டப்பட்டு உழைக்கஆரம்பிச்சேன்.

ரெண்டு வருஷம் கழிச்சு நானும்என் ஃபிரண்ட் கமுதி ராமசாமிப்பட்டியைச் சேர்ந்தசிதம்பரமும் சேர்நது 'சகாகா'வுலயே சொந்தமா பஞ்சர் கடை ஒண்ணு போட்டோம்.இதை என்னோட கஃபில்(முதலாளிமெத்தான்கிட்ட யாரோ போட்டுக்கொடுத்துட்டானுங்கஅந்தாளு வந்து, ''சொந்தமா கடை வச்சிருக்கியாமாசம்மூவாயிரம்வருஷத்துக்கு இருபத்தஞ்சாயிரம் கமிஷன் கொடுத்தாத்தான் உன்னோட'இக்காமா'வை(அடையாள அட்டையைரெனிவல் பண்ணுவேன்'னு மிரட்டினார்.
இது சம்பந்தமா 'சகாகாவந்திருந்த இந்திய தூதரக அதிகாரிகள்கிட்ட சொன்னப்போ, 'இதையெல்லாம் நீங்கதான் பேசித் தீர்ததுக்கணும்பாஸ்போர்ட் ரெனிவல் பண்றதுமட்டும்தான் எங்களோட வேலை'ன்னு சொல்லிட்டாங்கவேற வழியில்லாம மாசம்ரெண்டாயிரம் கொடுக்கறேன்னு ஒத்துக்கிட்டு தொழிலைப் பாத்துக்கிட்டிருந்தேன்.

போன மாசம் 21-ம் தேதி காலைல வாட்டர் சர்வீசுக்காக ஒரு கார் வந்து நின்னதுஅதைரிவர்ஸில் எடுக்கச்சொல்லிக் கை காமிச்சிட்டு இருந்தப்போபிரேக்கை மிதிக்கிறதுக்குப்பதிலாஅவன் ஆக்ஸிலேட்டரை மிதிச்சிட்டான்கார் வேகமா வநது மோதினதுலஎனக்கு கால் உடைஞ்சிருச்சுஉடனடியா அங்கிருந்த ஜி.எச். என்னை அட்மிட்பண்ணாங்க.
'ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்குவாஸ்குலர் சர்ஜரி பண்ணனும்அதுக்குஆஞ்சியோகிராம் மெஷின் இங்க இல்லைவேற ஹாஸ்பிட்டல் பாததுக்கங்க'ன்னுசொல்லிட்டாங்கபக்கததுல உள்ள 'தபுக்ஏரியாவில் அந்த வசதி இருந்ததுஆனா,முஸ்லிம்களை மட்டும்தான் அட்மிட் பன்ணுவோம்வேற யாருக்கும் அனுமதிஇல்லைன்னு சொல்லிட்டாங்க.
ஜி.எச்.சில் இருந்த டாக்டர், 'சீக்கிரமா நீ இந்தியாவுக்கு போனாத்தான் உன் காலைக்காப்பாத்த முடியும்'னு சொல்லிட்டார்லோக்கல் போலீஸ்காரங்க வந்து, 'இந்தியாபோகணும்னா மேற்கொண்டு இழப்பீடு கேட்க மாட்டேன்வழக்குத் தொடரமாட்டேன்னு கையெழுத்துப் போட்டாத்தான் உங்களை விடுவோம்'னுமனிதாபிமானமே இல்லாம பேசினாங்க.
நஷ்ட ஈட்டுக்காக காலையா இழக்க முடியும்நன்பர்களோட உதவியால சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்' எனக்கு மட்டும் நாலு சீட் ரிசர்வ் பண்ணேன்அப்போதான்காலை நீட்டி சவுகர்யமா வச்சுக்க முடியும்போன 26-ம் தேதி காலைல 9-மணிக்கு'அல்ஜூஃப்' இருந்து கிளம்பி 10-மணிக்கு ரியாத் வநது சேர்ந்தேன்அங்கிருநதுசென்னைக்கு நடு ராத்திரி 1.30-மணிக்குத்தான் ஃபிளைட்இதுக்கிடையில் பதினஞ்சுமணி நேரம் நான் பட்ட கஷ்டம் இருக்கே... இப்போ நினைச்சாக்கூட நடுங்குது.
காலை நீட்டி உக்காரக்கூட அனுமதிக்கலைஅங்க என்னைக் கேட்ட முதல் கேள்வி, 'நீ இந்துவாமுஸ்லிமா?'ங்கிறதுதான். 'இந்து'ன்னு சொன்னவுடனே, 'வெளியேபோடா நாயே!'ன்னு துரத்தி விட்டுட்டாங்கஉதவிக்கு யாருமில்லைஒண்ணுக்குப்போகக்கூட வழியில்லாம நான் பட்ட கஷ்டம்காலை நீட்டி வைக்காம தொங்கப்போட்டதால வலி உயிர் போச்சு.
உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் பண்ண‌‌வனுக்குத்தான் ஆண்டவன் அப்படியொருவலியைத் தருவான்பதினஞ்சு மணி நேரம்ங்கிறது எத்தனை நொடியோஅத்தனைநொடியும் உயிர் போகிற வலியை அனுபவிச்சேன்.

ஒரு வழியா சென்னை வநது அப்பல்லோ ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன்ரெண்டுநாள் முன்னாடி வந்திருந்தா காலை காப்பாத்தி இருக்கலாம்னு சொல்லிட்டாங்கநாலுடிக்கெட் ரிசர்வ் பண்ணதுக்கு 60 ஆயிரம் ஆச்சுஇங்கே என் காலை வெட்டியெடுக்க 1லட்சத்து நாப்பதாயிரம் கொடுத்திருக்கேன்.
நஷ்ட ஈடு எதுவும் கேட்க மாட்டேன்னு சவுதி போலீஸ்காரங்க‌ கட்டாயப்படுத்தக்கையெழுதது வாங்கிட்டாங்கஇதுக்கெல்லாம் யார் பொறுப்புஎன் வாழ்க்கையோடஎதிர்காலத்துக்கு யாராவது உதவுவாங்களாஎந்த பதிலும் எங்கிட்ட இல்லைஆனா,ஒண்ணு மட்டும் சொல்வேன்பிச்சையெடுத்தாலும் உள்ளூர்லயே எடுங்க‌. வெளிநாட்டுவேலைக்குப் போய் மோசம் போய்டாதீங்க'' &கண்களில் விரக்தியுடன் சொல்லிமுடித்தார் சதீஷ்பாபு.
                                                           

அப்பல்லோ உள்ளிட்ட இந்திய மருத்துவமனைகளுக்கு நீண்ட பைஜாமாவும்நீண்டதாடியும் வைத்த அராபிய ஷேக்குகள் தினந்தோறும் வந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள்அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கருத்துகள் இல்லை: